ஆடியோ விவகாரம்...அண்ணாமலை சவால்...!

கோயில் இடிப்பு விவகாரம் குறித்து தமிழ்நாடு அமைச்சர்கள் பேசியவற்றை தடயவியல் ஆய்வு செய்து, அது உண்மையில்லை என நிரூபணம் ஆனால் அரசியலைவிட்டு விலக தயார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
அண்ணாமலை சவால் :
கோவை ஈச்சனாரியில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, அமைச்சர் கே.என்.நேரு மற்றும் டி.ஆர்.பாலு பேசியவற்றை நான் எடிட் செய்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் எனவும், நிரூபிக்கவில்லை எனில் முதலமைச்சர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
எடிட் செய்து வெளியிட்டதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருக்கும் நிலையில் அவர் சொல்லும் இடத்தில் வீடியோவை தரத் தயார் எனவும், அதனை முதலமைச்சர் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தலாம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிக்க : 30 நிமிடங்கள்...தனியார் தொலைக்காட்சிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்...!
அதனை தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி குறித்த பிசிசி ஆவணப்படத்தில் உண்மை இல்லை எனவும், அதனை தாரளமாக திரையிடலாம் என கூறினார். மேலும் ஆவணப்படத்தை மறைக்க வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை என தெரிவித்த அவர் அதைப் பற்றி கவலை இல்லை என தெரிவித்தார்.
இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தல் தான் எங்களின் இலக்கு எனவும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.
இச்சிபுத்தூர் ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் 11 லட்சத்து 90 ஆயிரம் செலவில் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில்,அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி, இச்சிப்புத்தூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்ட அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், இச்சிப்புத்தூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிடம் தனியார் கட்டிடத்தில் தற்போது செயல்பட்டு வருவதாகவும், 2022-2023ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் 11லட்சம் 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது என்றும்,விரைவில் அரசின் சொந்த கட்டத்தில் அங்கன்வாடி மையம் செயல்படும் எனவும் பதிலளித்துள்ளார்.
இதையும் படிக்க: ஆசிரியர்களின் திறமையை வளர்ப்பதற்காக 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு...!!
புதிய பாலிடெக்னிக் கல்லூரி அமைப்பதற்கு நிதி மற்றும் இதற்கு காரணம் அல்ல மாணவரின் சேர்க்கை தரம் அதை பொறுத்துதான் கல்லூரிகள் திறக்கப்படும்.
சட்டப்பேரவை கூட்ட தொடரின் போது வினாக்கள் விடை நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வகை தொழில்நுட்ப கல்லூரி அமைப்பதற்கான அரசு முன்வருமா என்று சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி எழுதிய கேள்விக்கு பதில் அளித்த உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார்.
அந்தப் பகுதியில் அரசு கலைக் கல்லூரி உருவாக்கப்பட்டு அதற்கான கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது எனவும் அந்தப் பகுதியில் பல்வேறு கல்லூரி தற்போது அமைத்தால் அங்கு மாணவர்கள் சேர்க்கை என்பது அதிக அளவில் சேர்வது இல்லை எனக் கூறிய அமைச்சர் ஆனால் இந்த ஆண்டு புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக 1000 ரூபாய் வழங்கிய பிறகு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டு 10,500 மாணவிகள் புதிதாக சேர்ந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
மேலும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியை திறன்மிகு மையமாக மாற்ற வரும் ஆண்டில் திட்டமிட்டு இருக்கிறோம் எனவும் பாலிடெக்னிக் கல்லூரி, பல்வகை தொழில்நுட்ப கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
புதிய பாலிடெக்னிக் கல்லூரி அமைப்பதற்கு நிதி மட்டுமே இதற்கு காரணம் அல்ல மாணவரின் சேர்க்கை தரத்தை பொறுத்துதான் கல்லூரிகள் திறக்கப்படும் எனவும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மொத்தமாக 2940 இடங்கள் உள்ளது எனக் கூறிய அமைச்சர் அதில் 1023 இடங்களுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்று உள்ளது எனவும் தெரிவித்தார். மேலௌம் மீதமுள்ள இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது எனவும் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாகவும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றுகிற ஆசிரியர்களின் திறமையை வளர்ப்பதற்காக 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: கடன் உதவி 30 ஆயிரம் கோடியாக உயர்த்தி அறிவிப்பு..!!!
ஒரு செல்ஃபோன் டவர் கூட இல்லாமல் 10 ஆண்டுகள் வளர்ச்சியில் பின்தங்கிய கிராமம்...
4G, 5G என முன்னேறி செல்லும் நிலையில் 10 ஆண்டுகள் வளர்ச்சியில் பின்னோக்கி சென்ற கிராமம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
கிருஷ்ணகிரி | இன்றிய காலத்தில் நமது கைகளில் விரல்கள் இருக்கின்றனவோ இல்லையோ, ஆனால், செல்ஃபோன் நிச்சயமாக இருக்கிறது. அதிலும், ஒரு சிலர் இரண்டு சிம் கார்டுகளும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அந்த செல்போன்களுக்கு சேவை தரும் செஃபோன் டவர்களில்லை என்றால், அவ்வளவு தான். மரத்தின் மீது ஏறி நின்றாலும் சரி, குன்றின் மீது ஏறி நின்றாலும் சரி, சிக்னலே கிடைக்காது.
இந்த அவசர உலகத்தில், டவர் இல்லாத ஒரு ஊருக்கு சென்றால், நம்மால் எப்படி செல்ஃபோன் பயன்படுத்த முடியும்? அப்படி ஒரு கிராம் இன்றும் இருக்கிறது என்றும், அங்கு பல ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர் என்றும் கூறினால், உங்களால் நம்ப முடியுமா? நம்ப முடியவில்லை என்றாலும் அது தான் உண்மையாக இருக்கிறது.
மேலும் படிக்க | “வேலைக்கு வராவிட்டால் ஊதியம் கிடைக்காது” - மின்வாரியம் எச்சரிக்கை...
சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட காளிங்காவரம் ஊராட்சி, ஒசூரிலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவிலும் கிருஷ்ணகிரியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஊராட்சியில் மட்டம்பள்ளி, அக்ரகாரம், காளிங்காவரம், கொடித்திம்மனப்பள்ளி, ஜவுக்குபள்ளம், தின்னூர், குருமூர்த்தி கொட்டாய் என 7 குக்கிராமங்கள் அமைந்துள்ளன.
2500 வீடுகளுக்கும் அதிகமாக உள்ள இந்த ஊராட்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய 1000 - கும் அதிகமான மாணவ மாணவிகள் உள்ளனர். இந்நிலையில், இந்த கிராமத்தில் ஒரு செல்ஃபோன் டவர் கூட இல்லாமல் இருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் படிக்க | கனமழையால் அடியோடு சாய்ந்த வாழை மரங்கள்...
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நேரடி வகுப்புகளின்றி
காளிங்காவரம் ஊராட்சியில் BSNL உள்ளிட்ட எந்த தொலை தொடர்பு நிறுவனங்களின் டவர்களும் இல்லாததால் மாணவ மாணவிகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க கைகளிலில் செல்ஃபோன், புத்தகங்களுடன் உயர்ந்த மலைபகுதிக்கும் அங்கு ஆபத்தான முறையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் டவரை தேடி அலைந்து பங்கேற்று கல்வி பயின்றுள்ளனர்.
காளிங்காவரம் ஊராட்சியில் துவக்கப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளி, துணை சுகாதார நிலையம், தமிழ்நாடு கிராம வங்கி, தபால்நிலையம், மக்கள் சேவை மையம் என அரசின் அனைத்து அலுவலகங்கள் இருந்தாலும் தொலைதொடர்பு நெட்வொர்க் இல்லாததால் இணைய வசதியின்றி பயணில்லாதவாறே காட்சியளிக்கின்றன.
மேலும் படிக்க | உணவக கழிவு நீரால் விவசாய நிலம் பாதிப்பு... விவசாயிகள் புகார்...
இதுக்குறித்து பேசிய காளிங்காவரம் ஊராட்சி மன்ற தலைவர் ஹரீஷ், 15 ஆண்டுகளாக டவர் அமைக்க வலியுறுத்தி வருவதாகவும், கர்ப்பிணி பெண்கள், விபத்திற்குள்ளானவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ்களை தொடர்புக்கொள்ள குறிப்பிட்ட பகுதிக்கு டவரை தேடி ஓடுவதாகவும், தகவலை தெரிவிப்பதற்குள் பல உயிரிழப்புக்களை சந்தித்திருப்பதாக கூறுகிறார்.
மேலும், இணைய வசதி இல்லாததால் தொழில் முணைவோர், வியாபாரிகள் தொழில் மேற்க்கொள்ள முடியாமல் ஒரு ஊராட்சியில் உள்ள 7 கிராமங்கள் வளர்ச்சியில் பின்னோக்கி சென்றுவிட்டதாக கூறுகிறார்.
மேலும் படிக்க | ரூ.1.50 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்...
இதுக்குறித்து அண்மையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மனோ தங்கராஜ் ஆகியோரை சந்தித்து மனு அளித்ததால் BSNL 4G செல்போன் டவர் அமைக்க மாவட்ட ஆட்சியர் தரப்பில் உத்தரவு கடிதம் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஊராட்சி மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன் நாளைய எதிர்காலமான இளைஞர்களின் நலனிற்காகவும், மாணவர்களின் நலனை கருத்திக்கொண்டு விரைவில் செல்போன் டவரை அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் படிக்க | வனத்துறையினரின் அலட்சியத்துக்கு பலியாகும் நூற்றுக்கணக்கான ஆமைக்குஞ்சுகள்...
சுய உதவிக் குழுக்களுக்கு கொடுக்கப்படும் கடன் உதவியை கடன் தொகையாக பார்க்கவில்லை, அவர்களின் உழைப்பிற்கு கொடுக்கக்கூடிய நம்பிக்கை தொகையாக பார்க்கிறோம்
விரைவான நடவடிக்கை:
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நிகழ்வில் வினாக்கள் விடைகள் நேரத்தில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உதவியை விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பினார்.
கடன் தொகை:
இதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் சுய உதவி குழுக்கள் வங்கிக்கடன் பெற மாதம் ஆறு முறை குழு கூட்டம் நடத்தி சேமிப்பு செய்து கணக்கு புத்தகங்களை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் சுய உதவி குழு கடன் விண்ணப்பத்தின் அடிப்படையில் கடனுதவி உடனடியாக அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.
மேலும் அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் ஆய்வு செய்து தகுதியின் அடிப்படையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 15 நாட்களில் கடன் அனுமதி வழங்கி, 21 நாட்களில் சுய உதவிக் குழுவினரின் வங்கி கணக்கிற்கு கடன் தொகை செலுத்தப்படுகிறது எனவும் கூறினார்.
அதிகரித்த தொகை:
தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி 21 நாட்களுக்கு மேல் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட வங்கியாளர்கள் குழு கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு விரைந்து கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் 2022 - 23 ஆம் நிதி ஆண்டில் 25 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் 25,219 ஆயிரம் கோடி ரூபாய் சுய உதவி குழுக்களுக்கு கடனனுவி அளித்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.
நம்பிக்கை தொகை:
மேலும் இந்த ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் உதவி 30 ஆயிரம் கோடியாக உயர்த்தி அறிவித்திருக்கிறார்கள் எனவும் இந்த ஆண்டும் அந்த இலக்கை விட அதிக அளவில் வங்கி கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். தொடர்ந்து இந்த சுய உதவிக் குழுக்களுக்கு கொடுக்கப்படும் கடன் உதவியை அரசும், முதலமைச்சரும் கடன் தொகையாக பார்க்கவில்லை எனவும் சுய உதவிக்குழுவில் பங்கேற்றுள்ள சகோதரிகளின் உழைப்பிற்கு கொடுக்கக்கூடிய நம்பிக்கை தொகையாக தான் பார்க்கிறோம் எனவும் பேசினார்.
இதையும் படிக்க: இடம் ஒதுக்கீடு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.... அமைச்சர் கே.என்.நேரு!!
தமிழ்நாட்டில் மதுராந்தகம் நகரப் பேருந்து நிலையத்தை மேம்படுத்தவும், வால்பாறை, புதுக்கோட்டை, கும்பகோணம், ஆரணி பகுதியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மதுராந்தகம், வால்பாறை, புதுக்கோட்டை, கும்பகோணம், ஆரணி பகுதிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா என சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மதுராந்தகம் நகரப் பேருந்து நிலையத்தை மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் தொகை அதிகமுள்ள இடங்கள் கண்டறியப்பட்டு பேருந்து நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும், வால்பாறை பகுதியில் புதிய பேருந்து நிலையத்திற்கான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், திருவண்ணாமலை பகுதியில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், அதனை தரம் உயர்த்த அரசு முழுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் உறுதியளித்தார்.
அதேபோல், புதுக்கோட்டை பேருந்து நிலையம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு புதிய பேருந்து நிலையம் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கும்பகோணம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
இதையும் படிக்க: தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்ட சித்தர் தின விழா...!!