ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் விவகாரம்.. உள்துறை அமைச்சரிடம் நேரில் முறையிட உள்ளதாக அண்ணாமலை பேட்டி

ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நேரில் முறையிட உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் விவகாரம்.. உள்துறை அமைச்சரிடம் நேரில் முறையிட உள்ளதாக அண்ணாமலை பேட்டி

பாஜக மாநில அலுவலகமான கமலாலயத்தில் இன்று புதிய இந்தியா 2022 என்ற புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்தியாவில் பேராாட்டக்காரர்களுக்கு ஆளுநர் செல்லும் சாலையின் ஓரத்திலேயே இடம் ஒதுக்கிய ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் எனக் கூறினார்.

ஆளுநர் காரின் மீது தாக்குதல் நடந்தது தொடர்பாக தான் வீடியோ ஒன்றை  டிவிட்டரில் பதிவிட்டுள்ள தாகவும்,  அதை பார்த்துவிட்டு ஆளுநர் கார் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என முதல்வர் கூறட்டும் என்றும் அண்ணாமலை கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழில் பெயரிட்டே இனி அலுவல் குறிப்புகள் மற்றும் விளம்பரங்களில் பயன்படுத்த வேண்டும் எனக் கூறினார்.