இபிஎஸ் பெயரிலேயே அனைத்து மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டனவா..?!

இபிஎஸ் பெயரிலேயே அனைத்து மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டனவா..?!

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் மொத்தம் 222 பேர் இபிஎஸ்ஸுக்கு  ஆதராவாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் அவர் போட்டியின்றி தேர்வாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிமுக தேர்தல்:

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே 'அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்' வரும் 26-ம் தேதி நடைபெறும் என்று கட்சி தலைமை அண்மையில் அறிவித்தது.  அதன்படி, பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்பமுள்ளோர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும், 20-ந் தேதி காலை 11 மணிக்கு வேட்பு மனுகள் மீது பரிசீலனை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.  

வேட்பு மனுக்களை திரும்பப் பெற 21-ந்தேதி மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என்றும், பதிவான வாக்குகள் 27-ந் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமை அறிவித்தது. 

ஆதரவாக..:

இதனைத் தொடர்ந்து, இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சனிக்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் மாலை 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில், 222 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும், மற்ற அனைத்து மனுக்களும் எடப்பாடி பழனிச்சாமி பெயரிலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருமனதாக:

இதனால் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க:   மூன்றாவது நாளாக கோடை மழை .... மகிழ்ச்சியில் விவசாயிகள்...!!