கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகள் அறிவிப்பு...

2010 முதல் 2019 வரையிலான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகள் அறிவிப்பு...

2010 முதல் 2019 வரையிலான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருக்கும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-ம் தேதி 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தது. அந்தவகையில் 2010 முதல் 2019 வரையிலான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி 2010-ம் ஆண்டுக்கான விருது முனைவர் வீ.எஸ்.ராஜம், 2011க்கு பேராசிரியர் பொன். கோதண்டராமன்,  2012க்கு  பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி,  2013க்கு  ப.மருதநாயகம் 2014க்கு பேராசிரியர் கு.மோகனராசு மற்றும்  2015 க்கு மறைமலை இலக்குவனார் ஆகியோருக்கு விருது அறிக்கப்பட்டுள்ளது. மேலும் 2016 க்கு  கா.ராஜன்,  2017 க்கு உல்ரிக் நிக்லாஸ்,  2018க்கு கவிஞர் ஈரோடு தமிழன்பன், 2019க்கு பேராசிரியர் கு.சிவமணி ஆகியோருக்கு செம்மொழித் தமிழ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.