ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில்: துர்கா ஸ்டாலின் நேரில் சென்று சாமி தரிசனம் ...

நடிகர் அர்ஜுன் சென்னையில் கட்டி வந்த ஆஞ்சநேயர் கோயிலின் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில்: துர்கா ஸ்டாலின் நேரில் சென்று சாமி தரிசனம் ...

தமிழ் சினிமாவின் அனுபவம் வாய்ந்த நடிகரும் தீவிர ஶ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் பக்தருமான ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சென்னை, போரூரில் உள்ள கிருகம்பாக்கத்தில் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் என்ற கோவில் கட்டியுள்ளார். இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்த கோவில் கட்டிய அனுபவம் குறித்து  பேசிய நடிகர் அர்ஜுன், இந்த கோவில் என்னுடைய 17 வருடக் கனவு என்றும் இதற்கு ஏன் 17 வருடங்கள் ஆனது என்பதை விட அந்த நாட்கள் எனக்கு அளித்த அனுபவங்கள் முக்கியமானவை என்றார்.

 தாய், துணைவி, மகள்கள் என என் குடும்பம் எனது இந்த முயற்சிக்கு உறுதுணையாக நின்றனர் என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளதாகவும், மேலும் பலரின் ஆதரவும் என்னை மேலும் மேலும் இந்த நற்செயலைச் செய்யத் தூண்டுதலாக இருந்தது என தெரிவித்தார்.

இருப்பினும் இந்த கோவிலை நான் கட்டினேன் என்பதை விட, ஒரு தெய்வீக சக்தி எனக்குள் இருந்து இந்த செயலை செய்யத் தூண்டியது என்பது தான் உண்மை என நடிகர் அர்ஜூன் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ ஆஞ்சநேயர் சாந்தமாக அமர்ந்திருக்கும் நிலையில் இருக்கும் இந்த ஒற்றைக்கல் சிலை (Monolithic) 180 டன் எடையுடையது. இது தான் முதல் 180 டன் எடையுடய ஶ்ரீ ஆஞ்சநேயர் சிலையும், அயோத்தியில் இருந்து எடுத்துவரப்பட்ட மண்ணின் மீது ஶ்ரீ ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் விநாயகர், நாகராஜர் சன்னதிகளும் உள்ளது கொரோனா கட்டுபாடுகள் முடிந்தவுடன் விரைவில் இந்த கோவில் பொது மக்களுக்காக திறக்கப்படவுள்ளதாக நடிகர் அர்ஜூன் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த கும்பாபிஷேக  விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.