தமிழ்நாடெங்கும் அங்கன்வாடி ஊழியா்கள் தொடா் காத்திருப்பு போராட்டம்...!!

தமிழ்நாடெங்கும் அங்கன்வாடி ஊழியா்கள் தொடா் காத்திருப்பு போராட்டம்...!!

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். 

அங்கன்வாடி மையங்களுக்கு கோடை விடுமுறை வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்துள்ள அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக, சென்னை தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினா் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதேபோல் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு கோாிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் கலந்து கொண்டவா்கள் 10 ஆண்டுகள் பணி முடித்துள்ள அங்கன்வாடி உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோாிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

இதையும் படிக்க:நேர்மையான அதிகாரிகளை காக்குமா அரசு?

அரியலூர் பேருந்து நிலையம் அருகே அங்கன்வாடி ஊழியா்கள் கோாிக்கைகளை வலியுறுத்தி செல்போன் டார்ச் வெளிச்சத்தில் விடிய விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், கரூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோாிக்கைகளை வலியுறுத்தி இரவிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதேபோல் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கோாிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டம் நள்ளிரவையும் தாண்டியும் நீடித்து வருகிறது.