அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை...கலக்கத்தில் இல்லத்தரசிகள்!

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை...கலக்கத்தில் இல்லத்தரசிகள்!
Published on
Updated on
1 min read

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்திருக்கிறது. 


தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் என அதிரடியாக குறைந்தது. அதன்படி, 22 கேரட் ஆபரண தங்கம் 1 சவரன் ரூ. 44, 800 க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், நேற்றைய தினம் சவரனுக்கு 240 உயர்ந்து சவரன் 45 ,040க்கு விற்கப்பட்டது. 

இந்நிலையில் இன்றைய தினம் ஆபரண தங்கம் சவரனுக்கு 400 ரூ உயர்ந்து 1 சவரன் 45, 440 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 50 ரூ உயர்ந்து  5 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. 

இதேபோல் வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 81 ரூபாய் 40 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 81 ஆயிரத்து, 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அக்‌ஷயதிருதி நெருங்கும் நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இப்படி அதிரடியாக ஏற்றம் கண்டிருப்பது இல்லத்தரசிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com