புதிய நீச்சல் குளத்தில் உற்சாகமாக துள்ளி குதித்து விளையாடிய பார்வதி...இணையத்தில் வைரலாகும் வீடியோ!

புதிய நீச்சல் குளத்தில் உற்சாகமாக துள்ளி குதித்து விளையாடிய பார்வதி...இணையத்தில் வைரலாகும் வீடியோ!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட குளியல் தொட்டியில் யானை இங்கும் அங்கும் ஓடியாடி விளையாடும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கோவில் யானை பார்வதிக்கு கண்ணில் வெண்புரை ஏற்பட்டு பார்வை குறைபாடு ஏற்பட்டு வந்தது. இதற்காக கால்நடை மருத்துவ நிபுணர்கள் குழு அமைத்து தொடர் சிறப்பு சிகிச்சை வழங்கப்பட்டது. இதனால் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, யானையின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக குளித்து மகிழ்ந்து விளையாடும் வகையில் 23.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட குளியல் தொட்டி அமைக்கப்பட்டது. 

இதையும் படிக்க : ’தீ பரவட்டும்’ என்ற ஹேஷ்டேக்குடன் நன்றி தெரிவித்தார் முதலமைச்சர்...!

அதனை நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று திறந்து வைத்தார். பின்னர் நீச்சல் குளத்தில் இறக்கி விடப்பட்ட யானை, தண்ணீரைக் கண்டதும் உற்சாகத்தில் அங்கும் இங்கும் ஓடி குளித்து மகிழ்ந்து விளையாடியது அனைவரையும் கவர்ந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.