காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒரே சிந்தனையோடு இருக்கின்றன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மேகதாது அணையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.  
காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒரே சிந்தனையோடு இருக்கின்றன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றபோது பிரதமர் மோடியிடமும் இதை வலியுறுத்தினார்.இதனையடுத்து  தமிழக அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்தும் மேகதாது அணை அனுமதிக்க கூடாது என கோரிக்கையை வைத்தார்.

 இந்நிலையில் மேகதாது பிரச்னை குறித்து பேசுவதற்காக தமிழ்நாட்டு அரசு, அனைத்துக் கட்சிக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.பின்னர் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு காவிரி என்பது வாழ்வுரிமை என தெரிவித்தார்.

 காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் எனவும் காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சிகளும் ஒன்றுபட்ட சிந்தனையுடன் இருக்கின்றது என்பதை கர்நாடகாவுக்கு மட்டுமல்ல ஒன்றிய அரசுக்கு உணர்த்திட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

 காவிரி என்பது கர்நாடகத்துக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் முழு உரிமை கொண்டது எனவும் மேகதாது அணையை எந்த சூழலிலும் அனுமதிக்க மாட்டோம் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை என கர்நாடகா கூறுவதில் துளி அளவும் உண்மை இல்லை என்றும் மேகதாது அணை கட்டினால் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீரின் அளவு குறையும் என பேசிய முதல்வர், தமிழகத்தில் காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒரே சிந்தனையோடு இருக்கின்றன. நாம் அனைவரும் ஒன்றுப்பட்டு இருக்க வேண்டும் என்பதை கர்நாடகாவுக்கு மட்டுமல்ல ஒன்றிய அரசுக்கும் உணர்த்த வேண்டும்  என்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com