கல்லூரியில் படிக்கலாம்.. அடிக்கலாமா?.. வைரலான வீடியோவால் சிக்கிய மாணவிகள்.. முதல்வர் எடுத்த முடிவு என்ன?

கல்லூரி வகுப்பறையில் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவிகள் மது அருந்தும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கல்லூரியில் படிக்கலாம்.. அடிக்கலாமா?.. வைரலான வீடியோவால் சிக்கிய மாணவிகள்.. முதல்வர் எடுத்த முடிவு என்ன?

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் மது அருந்தும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில்,

தற்போது காஞ்சிபுரம் அடுத்துள்ள ஏனாத்தூரில் உள்ள தனியார் கலைக் மற்றும் அறிவியல் கல்லூரியில் B.B.A முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் வகுப்பறையில் மேஜை மேல் அமர்ந்துகொண்டு வெளிமாநில மதுவை குளிர்பானத்தில் கலந்து அருந்தும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர்  இயங்கி வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்வேறு பகுதியிலிருந்து பயின்று வருகின்றனர். காஞ்சிபுரத்தில் மிகப்பிரபலமான கல்லூரியாக இந்த கல்லூரி விளங்குகிறது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்த வீடியோ சம்பந்தப்பட்ட கல்லூரியின் சென்றுள்ளது. இதை தொடர்ந்து, இது குறித்து விசாரணை செய்ததில், அதே வகுப்பறையில் மாணவிகளுடன் படிக்கும் மாணவன் ஒருவன் மதுபானத்தை வாங்கி வந்ததாகவும்.. மது என்று தெரிந்தே அருந்தியதாகவும் மாணவிகள் ஒப்புக்கொண்டனர்.

இதை தொடர்ந்து, ஒரு மாணவன் உட்பட 5 மாணவிகள் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்தும், சம்மந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து இனி இது போல் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி முதல்வர் கூறியுள்ளார்.

சமீப காலங்களாகவே சமூக வலைத்தளங்களில் மாணவிகள் மது அருந்தும் வீடியோக்கள் வைரலாக பரவி வருகின்றன. இதற்கு சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.