உயிரிழந்த தம்பியின் ஆசையை.. மெழுகு சிலையின் மடியில்...குழந்தைகளுக்கு காதுகுத்திய அக்கா..! நெகிழ்ச்சி சம்பவம்

சாலை விபத்தில் உயிரிழந்த தம்பியின் ஆசையை நிறைவேற்றிய அக்காவின் செயல் காண்போரை ஆனந்த கண்ணீரில் தத்தளிக்க வைத்தது.

உயிரிழந்த தம்பியின் ஆசையை.. மெழுகு சிலையின் மடியில்...குழந்தைகளுக்கு காதுகுத்திய அக்கா..! நெகிழ்ச்சி சம்பவம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இந்நிலையில் இவரது மூத்த சகோதரியின் குழந்தைகளுக்கு காதணி விழா நடத்த குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர். இதில் இளைஞர் பாண்டித்துரை பங்கேற்க வேண்டும் என விரும்பினர். 
ஆனால் அந்த விழா வைப்பதற்கு முன்பே பாண்டித்துரை விபத்தில் இறந்துவிட்டார்.

இதனால் பாண்டித்துரை குடும்பத்தார் அவரது உருவ அமைப்பில் மெழுகு சிலை ஒன்றை வாங்கி,அதன்மீது அமர வைத்து அவரது மூத்த சகோதரியின் குழந்தைகளுக்கு அவரது குடும்பத்தார் காதுகுத்தினர்.

ஒரு தாய் மாமனாக நிறைவேற்ற வேண்டிய அவரின் ஆசையை அவரது மூத்த சகோதரி நிறைவேற்றிய இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அங்குள்ளவர்களை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்தியது. 

இதுகுறித்து இளைஞர் பாண்டித்துரையின் தாய் கூறும்போது, தனது அக்கா குழந்தைகளுக்கு தனது மடியில் அமரவைத்து காதணி விழா நடத்த வேண்டும் என்பதுதான் தனது மகனின் ஆசை என்றும், அதனை நிறைவேற்றும் வகையிலே இந்த காதணி விழாவை நடத்தி உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.