சிவராத்திரியை முன்னிட்டு மீண்டும் ஜல்லிக்கட்டு ஆரம்பம்! எந்த ஊரில் தெரியுமா?

சிவராத்திரியை முன்னிட்டு மீண்டும் ஜல்லிக்கட்டு ஆரம்பம்! எந்த ஊரில் தெரியுமா?

தஞ்சையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை உதவி ஆட்சியர் சுகபுத்ரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டையில் அமைந்துள்ள வீரமுனியாண்டவர் கோயிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

இப் போட்டியில் தஞ்சை,  திருச்சி,  அரியலூர்,  புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 650-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கின்றன. அத்துடன்,  300-க்கும் மேற்பட்ட  மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், போட்டிக்கான முன்னேற்பாடு பணிகளை உதவி ஆட்சியர் சுகபுத்ரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வீரர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.