"விவசாயம் தான் நாட்டின் ஆணிவேர்" ...கல்லூரியில் எம்.பி .கனிமொழி பேச்சு...

"விவசாயம் தான் நாட்டின் ஆணிவேர்" ...கல்லூரியில் எம்.பி .கனிமொழி பேச்சு...

கொரோனா காலகட்டத்தில் லாக் டவுன் போது மூடப்படாத ஒரே துறை விவசாயத்துறை.காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப விவசாயிகளை தயார் படுத்த வேண்டும். கிள்ளிகுளத்தில் விவசாயிகள் முன்பு கனிமொழி எம்.பி பேச்சு.

தூத்துக்குடி மாவட்டம் : கள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட மண்டல ஆய்வுக் கூட்டம் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.கனிமொழி தலைமையில் நடந்தது.

மேலும் தெரிந்து கொள்ள | மேலும் கடன்காரராக்கும் முயற்சியில் தனியார் கடைகள்... விவசாயிகளின் நிலை என்ன?

கூட்டத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்  உள்ளிட்டோர் பேசினர்.முன்னதாக கல்லூரி வளாகத்தில் புதிய மரக்கன்றுகளை நட்டு வேளாண்மை துறை சார்பில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த வேளாண்மை சார்ந்த பொருட்களை பார்வையிட்டனர்.

 தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா , விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன்,  தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் உள்பட திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய 5 மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.கனிமொழி பேசுகையில்,
வேளாண்மைக்கு என தனியாக பட்ஜெட் வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. "விவசாயம் தான் நாட்டின் ஆணிவேர்", கொரோனா காலகட்டத்தில் லாக் டவுன் போது "மூடப்படாத ஒரே துறை விவசாயத் துறை" ஆகும். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விவசாயிகளின் பிரச்சனைகளை உணர்ந்து கொள்ள வேண்டும். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப விவசாயிகளை தயார் படுத்த வேண்டும். விவசாய ஆராய்ச்சியில் புதிய பயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டு முன்னோடியாக இருக்கிறோம். அது வெளியில் தெரியாத நிலை உள்ளது. தமிழகத்தில் விவசாயம் மற்ற மாநிலங்களை விட முன்னோடியாக உள்ளது என்றார் அவர்.