மீனவர்களை துப்பாக்கியால் வானம் நோக்கி சுட்டு விரட்டி அடித்த இலங்கை கடற்படை...!

ராமேஸ்வரம் மீனவர்கள் மூன்று நாட்களுக்குப் பின் கடலுக்கு சென்ற நிலையில், இலங்கை கடற்படையினர், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, அவர்களை விரட்டி அடித்ததால் உயிர் பயத்துடன் கரை திரும்பினர்.

கடந்த 13-ந் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற மீனவர்கள் 17 பேரை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை கைது செய்ததுடன், அவர்களின் 3 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தது. இதனை கண்டித்து, கடந்த 15-ந் தேதி முதல் 17ஆம் தேதி வரை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அனுமதி சீட்டு கிடைத்ததை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.  

இதையும் படிக்க : ”4,000 சட்டங்கள் அமல்படுத்தப்பட்டது இங்கேதான்” - பிரதமர் மோடி

இந்நிலையில், தனுஷ்கோடி -  தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டி அடித்தனர். இதனால், 3 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள், உயிர் பிழைத்தால் போதும் என மீன்களை பிடிக்காமல் வெறுங்கையுடன் கரை திரும்பி உள்ளனர்.