கொலை மிரட்டல் விடுத்த கணவருக்கு ஆதரவாக செயல்படும் காவலர் மீது நடிகை ராதா மீண்டும் புகார்...

நடிகை ராதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரது கணவருக்கு ஆதரவாக செயல்படும் உதவி ஆய்வாளர்கள் துறை மீது ரீதியிலான  நடவடிக்கை எடுக்க கோரி வடபழனி மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

கொலை மிரட்டல் விடுத்த கணவருக்கு ஆதரவாக செயல்படும் காவலர் மீது நடிகை ராதா மீண்டும் புகார்...

சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ராதா.இவர் தனது  முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் விவாகரத்து பெற்ற நிலையில் உதவி ஆய்வாளர் வசந்த ராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை 2வது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் உதவி ஆய்வாளர் வசந்த ராஜா மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தன்னை சித்திரவதை செய்து மிரட்டுவதாக புகார் அளித்து பின் அதை வாபஸ் பெற்றார். இதற்கிடையில் உதவி ஆய்வாளர் வசந்த ராஜா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் நடிகை ராதா வசந்த ராஜா துறை ரீதியிலான விசாரணையின்போது தனக்கு சாதகமாக பேசுமாறு கூறி கொலை மிரட்டல் விடுப்பதாக நேற்றைய தினம் பரங்கிமலை இணை ஆணையரிடமும் அதனைத் தொடர்ந்து இன்று வடபழனி அனைத்து மகளிர் காபல் நிலையத்திலும் புகார் அளித்தார். மேலும் வசந்த ராஜா-விற்கு உடந்தையாக செயல்பட்டதாக பாரதி, இளம்பருதி ஆகிய இரு உதவி ஆய்வாளர்கள் மீதும் நடவடிக்கௌ எடுக்க வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.