முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்...படை திரட்டும் இபிஎஸ்...அதிமுகவினர் போராட்டம்...!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்...படை திரட்டும் இபிஎஸ்...அதிமுகவினர் போராட்டம்...!

தமிழ்நாட்டில் விஷ சாராய மரணங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் விஷ சாராயம் குடித்து 22 பேர் இறந்ததற்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டு அரசை கண்டித்து பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

இதையும் படிக்க : "83 மதிப்பெண்ணுக்கும் 84 மதிப்பெண்ணுக்கும் ஒரு நூற்றாண்டு வித்தியாசம்" விளக்கமளித்த இளம் பெண்..! வாழ்த்திய முதலமைச்சர்.. !!

அதில் குறிப்பாக சென்னை மதுரவாயலில் முன்னாள் அமைச்சா் பெஞ்சமின், தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,  கோவையில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, கோவில்பட்டியில்  முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்ட முன்னாள் அமைச்சா்கள் தலைமையில் அதிமுகவினா் முதலமைச்சா் மு.க.ஸ்டாலினை பதவி விலக கோரி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா்.