இனி எப்போதும் அதிமுக அதை பெற முடியாது...கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேச்சு!

இனி எப்போதும் அதிமுக அதை பெற முடியாது...கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேச்சு!

தமிழகத்தில் பழைய வலிமையை இனி அதிமுக பெற முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்  கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ஒற்றைக்கொள்கையில் காங்கிரஸ்:

தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்திபவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ், பாஜக சித்தாந்தம், மதவெறி தாக்குதல்களை தடுப்பது என்ற ஒற்றைக் கொள்கையில் இணைந்து எங்கள் கூட்டணி பயணிப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிக்க: கோவையை தொடர்ந்து கர்நாடகாவில் வெடி விபத்து...முதலமைச்சர் கொடுக்கும் விளக்கம் என்ன?

அதிமுகவால் ஏற்க முடியாது:

தொடர்ந்து பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ், பாஜக சித்தாந்தம், மதவெறி தாக்குதல்களை தடுப்பது என்ற ஒற்றைக் கொள்கையில் அதிமுகவால் எப்போதும் பயணம் செய்ய முடியாது. முதலில் இந்த கொள்கையை அதிமுக ஏற்கவும் முடியாது என்றும் கூறினார்.

பழைய வலிமையை அதிமுக பெற முடியாது:

அதேபோல் சமீப காலமாக, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறிவருகிறார். அவர் சொல்லுவது போல் அதிமுக மெகா கூட்டணி அமைத்தாலும் இயக்கப்போவது என்னவோ, மோடி, அமித்ஷா தான் என்றார். ஏனென்றால், அதிமுக தற்போது பாஜக மோடியின் மறு உருவமாக மாறி உள்ளது. அதிமுக வேறு  இயக்கத்தில் வெறுமனே நடித்து தான் வருகிறது. அதனால், தமிழகத்தில் பழைய வலிமையை இனி அதிமுக பெற முடியாது என்று கே.எஸ்.அழகிரி பகிரங்கமாக பேசினார்.