அதிமுக முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் மதுபோதையில் நிர்வாணமாக கோலத்தில் ரகளை.!!
அதிமுக முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன், மது போதையில் தனது பக்கத்து வீட்டில் நிர்வாணமாக புகுந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2014 முதல் 2019ஆம் ஆண்டு வரை நீலகிரி தொகுதி அதிமுக எம்பியாக பதவி வகித்தவர் கோபாலகிருஷ்ணன். இவர், குன்னூர் அருகேயுள்ள முத்தாலம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தீபாவளியன்று மதுபோதையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் கோபி என்பவரது வீட்டுக்கு கோபாலகிருஷ்ணன் முழு நிர்வாணமாக சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த அந்த வீட்டின் உரிமையாளர் கோபி, இவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக 2 தரப்பிலும் புகார் அளிக்கப்பட்ட நிலையில், கோபாலகிருஷ்ணன் மீது ஆபாசமாக நிற்பது, கொலை மிரட்டல் விடுத்தது உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் எம்.பியை தாக்கிய கோபியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.