விரைவில் அதிமுக உட்கட்சி தேர்தல்... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தலைமையில் ஆலோசனைக் கூட்டம்...

அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்துவது குறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.

விரைவில் அதிமுக உட்கட்சி தேர்தல்... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தலைமையில் ஆலோசனைக் கூட்டம்...
அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அக்கட்சியில் உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்றும், சர்வாதிகாரப் போக்குடன் கட்சியின் தலைமை, நிர்வாகிகளை நியமித்து வருவதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம் தரப் பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், அதிமுகவின் உட்கட்சித் தேர்தலை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடித்து விடுவதாக, அக்கட்சியின் சார் பில் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
 
இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்த முடிவு செய்துள்ள கட்சி தலைமை, உட்கட்சி தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக இன்று காலை 11 மணியளவில் ஆலோசனை மேற்கொள்கிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே. பி.முனுசாமி, ஆர்.வைத்தியலிங்கம் மற்றும் மூத்த தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.