களத்தில் குதித்த மாடுபிடிவீரரை தூக்கி வீசிய காளை...சோகத்தில் மூழ்கிய மக்கள்!

களத்தில் குதித்த மாடுபிடிவீரரை தூக்கி வீசிய காளை...சோகத்தில் மூழ்கிய மக்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியில் காளை தூக்கி வீசியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

மகா சிவராத்திரியையொட்டி பொன்னமராவதி அடுத்த வார்பட்டு கிராமத்தில் உரிய அனுமதி பெறாமல் மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றுள்ளது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மஞ்சு விரட்டு போட்டியில், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்கப்பட்டன. சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் வீரத்துடன் அடக்கினர்.

இதையும் படிக்க : வாக்காளர்களின் தரவுகள் விற்பனையாகிறதா...? முற்றுப்புள்ளி வைத்த தேர்தல் அலுவலர்!

அப்போது, சீறிப்பாய்ந்து வந்த காளை ஒன்று முட்டித் தூக்கி வீசியதில் சிவக்குமார் என்ற இளைஞர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மிகவும் உற்சாகமாக நடைபெற்று வந்த மஞ்சு விரட்டு போட்டியில் இளைஞர் ஒருவர் பலியான நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.