ஏ.டி.எம். மிஷினில் மாட்டிக் கொண்ட வாலிபர்... .. கையும் களவுமாக போலீசில் சிக்கினார் ...

நாமக்கல் அருகே ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற வடமாநில வாலிபர் போலீஸ் பிடியில் வசமாக சிக்கினார்.

ஏ.டி.எம். மிஷினில் மாட்டிக் கொண்ட வாலிபர்... .. கையும் களவுமாக போலீசில் சிக்கினார் ...

நாமக்கல் மாவட்டம் அணியாபுரத்தில் உள்ள  ஏ.டி.எம்மில், நள்ளிரவில் புகுந்த வடமாநில இளைஞர் ஒருவர், இயந்திரை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்தின்பேரில் அந்த ஏ.எடி.எம் மையத்திற்குள் சென்றுள்ளனர்.

அந்த வட மாநில இளைஞர், ஏ.டி.எம் இயந்திரத்தின் பின்புறத்தில் ஓட்டையிட்டுக் கொண்டிருந்ததை கண்ட போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அந்த இளைஞர் பீகார் மாநிலம் கிழக்கு சாம்ரான் பகுதியை சேர்ந்த உபேந்திர ராய்  என்பதும், தனியாருக்கு சொந்தமான கோழித் தீவன ஆலையில் மூட்டை தூக்கம் வேலை பார்த்து வந்தது தெரியவந்துள்ளது.