2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண் ஒருவர் பலி  

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண் ஒருவர் பலி   

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து விருதுநகர் நோக்கி சென்றுள்ளனர். இதேபோல், மேல்மருவத்தூரை சேர்ந்த முத்துவிநாயகமணி என்பவரும் தனது குடும்பத்தினருடன், காரில் புளியங்குடி நோக்கி சென்றுள்ளார். அப்போது மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முத்துவிநாயகமணியின் கார் டயர் திடீரென வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த, ராமகிருஷ்ணனின் கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் 3 சிறுவர்கள் உட்பட 10  பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ராமகிருஷ்ணன் மனைவி சொக்கம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.