தனியார் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழப்பு..!

தனியார் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழப்பு..!

இமாச்சல பிரதேசம் மாநிலம் சண்டிகர் அருகே தனியார் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கமலா நேரு கல்லூரி மாணவிகள் 44 பேர் இமாச்சல பிரதேச மாநிலம் மணாலிக்கு சுற்றுலா சென்றனர். அப்போது சண்டிகர்-மணாலி சாலையில் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 40 பேர் பிலாஸ்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தேடி வருகின்றனர்.