பாதுகாப்பு கேட்டு குடும்பத்துடன் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த காவலர்...

சேலம் அருகே பாதுகாப்பு கோரி, காவலர் ஒருவர் குடும்பத்துடன்  சார்-ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு கேட்டு குடும்பத்துடன் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த காவலர்...

சேலம் மாவட்டம் வெள்ளையன் திட்டு பகுதியை சேர்ந்தவர் மோகன் குமார். கொளத்தூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் இவருக்கும், இவரது பங்காளிகளுக்கும் இடையே பல வருடக்களாக வழித் தடபிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில், புதிதாக வீடு கட்டுவதற்கு ஆயத்தமான மோகன் குமார், அதற்கான கட்டுமான பொருட்களை இறக்கியுள்ளார்.

இதனிடையே, கட்டுமான பொருட்கள் எடுத்துச் செல்லும் இடம் தங்களுக்கு சொந்தமானது, அதில் செல்லக் கூடாது என தடுத்து நிறுத்திய அவரது பங்காளிள்,  மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த காவலர், பாதுகாப்பு கோரி,  மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தஞ்சம் புகுந்துள்ளார்