மதுபோதையில் ஆற்றை கடக்க முயன்ற நபர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மதுபோதையில் ஆற்றை கடக்க முயன்ற நபர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்.

மதுபோதையில் ஆற்றை கடக்க முயன்ற நபர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த காரணி பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம். இவர் இனிப்பகம் ஒன்றில் சமையலராக பணியாற்றி வந்தார்.   இந்நிலையில் முனிரத்தினம் மதுபோதையில் ஆற்றை கடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முனிரத்தினம் மரக்கிளையை பிடித்து தொங்கியுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை மற்றும் தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பொதுமக்கள் உதவியுடன் ஆற்று வெள்ளத்தில் சிக்கித்தவித்த முனிரத்தினத்தை பெரியபாளையம் காவல்துறையினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.