நண்பருடன் இணைந்து மலை ஏறிய நபர்... திடீரென மூச்சு திணறி பலி!!

கோவை மாவட்டத்திலுள்ள வெள்ளியங்கிரி மலையில் ஏறிய நபர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நண்பருடன் இணைந்து மலை ஏறிய நபர்... திடீரென மூச்சு திணறி பலி!!

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கரிகாலன். இவர் வெள்ளியங்கிரி மலை ஏற்றத்திற்காக தனது நண்பர் ராஜசேகர் என்பவருடன் கோவை வந்துள்ளார்.

இதனையடுத்து இருவரும் மலையேற்றத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது மலை ஏறும்போது கரிகாலனுக்கு லேசான மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

அப்போது அருகில் இருந்தவர்கள் சோதித்துப் பார்த்த போது அவர் இறந்தது தெரியவந்தது. தகவலறிந்து விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.