மருத்துவமனையில் ஆண்குழந்தை மாயம்... மர்ம நபர்கள் யார்..? போலீஸ் விசாரணை...
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை ஒன்று மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி பகுதியிலுள்ள திரெளபதி அம்மன் கோயிலில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் கோயிலை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
விழுப்புரத்தில் மேல்பாதி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நடைப்பெற்ற திருவிழாவின் போது குறிப்பிட்ட பிரிவினரை கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என மற்றோரு தரப்பினர் தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது.
இதையும் படிக்க : இன்று முதல் +1 விடைத்தாள் நகலை பதிவிறக்கம்...மறுமதிப்பீட்டிற்கான கட்டணம் எவ்வளவு தெரியுமா?
இதையடுத்து சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியுற்றதை தொடர்ந்து, கோயிலை பூட்டி சீல் வைக்கும்படி கோட்டாசியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் வருவாய்துறையினர் கோயிலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைத்தனர்.
தொடர்ந்து, வடக்கு மண்டல ஐஜி தலைமையில் அப்பகுதி முழுக்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கிராமம் முழுவதையும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், கோலியனூர் கூட்ரோடு வழியாக வரும் வாகனங்கள் விழுப்புரம், முண்டியம்பாக்கம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த மே மாதம் 19 ஆம் தேதி வெளியானது. இதில் மாணவிகள் 94.99 சதவீதமும், மாணவர்கள் 84.86 சதவீதமும், மொத்தம் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதையும் படிக்க : இனி 200 கி.மீ தூரத்திற்கும் முன்பதிவு செய்து கொள்ளலாம்...போக்குவரத்துத்துறை அதிரடி!
இந்நிலையில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் சிலர் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தனர். அந்த மாணவர்கள், தங்களின் விடைத்தாள் நகலினை இன்று பிற்பகல் முதல் தேர்வர்கள் https://dge. tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், அதன் பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு (https://dge. tn.gov.in//) இந்த இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மறுமதிப்பீட்டிற்கு ஒவ்வொரு பாடத்திற்கும் 505 ரூபாயும், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு மட்டும் 305 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு 205 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டுமென்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
200 கிலோ மீட்டர் வரையிலான குறைந்த தொலைவு பேருந்து பயணங்களுக்கும் முன்பதிவு செய்யும் வசதியை தமிழக அரசு இன்று முதல் தொடங்கியுள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தொலைத்தூரப் பயணிகளின் வசதிக்காக தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்கள் முழுவதும் பேருந்துகளை இயக்கி வருகிறது. அதன்படி, அரசு பேருந்துகளில் நீண்ட தூரம் பயணிக்க விரும்புவோர் இணையதளம் வாயிலாக இருக்கையை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இதையும் படிக்க : பைபார்ஜாய்: இன்னும் 6 மணி நேரத்திற்குள் தீவிர புயல்... வானிலை மையம் எச்சரிக்கை!
இந்நிலையில் முன்பதிவு சேவையை விரிவாக்கம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போக்குவரத்துத் துறை அறிவித்துள்ள செய்திக் குறிப்பில், அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி நடைமுறையில் உள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பாக இணையதளம் மற்றும் கைப்பேசி செயலி வழியாக முன்பதிவு செய்ய முடியும். இந்த சூழ்நிலையில், 200 கிலோ மீட்டா் தொலைவு வரையில் பயணிக்கும் பயணிகளுக்கும் முன்பதிவு திட்டம் விரிவாக்கப்படுகிறது.
அதன்படி, மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து பயணிக்கும் பயணிகள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்பதிவு கட்டணமும் கூடுதலாக வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மின்னல் தாக்கி பெண் உயிாிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்நிலையில் தொட்டியபட்டி கிராமத்தை சேர்ந்த தேவிகா என்பவா் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பாிதாபமாக உயிாிழந்தாா்.
இதையும் படிக்க : ஒடிசா விபத்தால் ஒத்திவைக்கப்பட்ட கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம்...!
இதேபோல் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த மழையால் சாலைகளில் வெள்ளநீா் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சா் கருணாநிதி நூற்றாண்டு விழா இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை திமுகவினா் தீவிரமாக செய்து வருகின்றனா்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கடந்த 3-ம் தேதி கொண்டாடப்பட இருந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்து காரணமாக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக திமுக தலைமை அறிவித்தது. மேலும் அந்த விழா ஜூன் 7-ம் தேதி கொண்டாடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி கருணாநிதி நூற்றாண்டு விழா இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. விழாவை திமுக சார்பில் மிகப்பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்விழாவையொட்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
இதையும் படிக்க : மல்யுத்த வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய டெல்லி காவல் துறையை கண்டித்து நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்...!
மேலும் இன்று சென்னை புளியந்தோப்பில் கூட்டணி கட்சியினர் பங்கேற்கும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசவுள்ளாா். இதேபோல் அரசு சார்பிலும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. கருணாநிதியை பெருமைப்படுத்தும் வகையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோரை இணைத்து விழாக்களை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.