35 லட்ச மதிப்பு.. 700 கிலோ கடல் அட்டை பதுக்கல்.. இலங்கைக்கு போகும் முன் அதிரடி பறிமுதல்!!

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

35 லட்ச மதிப்பு.. 700 கிலோ கடல் அட்டை பதுக்கல்.. இலங்கைக்கு போகும் முன் அதிரடி பறிமுதல்!!

ராமேஸ்வரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரைப் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டையை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர், இலங்கைக்கு  கடத்துவதற்காக பதப்படுத்தப்பட்ட 700 கிலோ எடை கொண்ட கடல் அட்டையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைப்பற்றப்பட்ட கடல் அட்டையின் மதிப்பு சர்வதேச அளவில் 35 லட்ச ரூபாய் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.