ஒரே நாளில் 7 மாணவர்கள் ஒரு ஆசிரியருக்கு கொரோனா உறுதி... பெற்றோர்கள் அதிர்ச்சி...``

திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 7 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஒரே நாளில் 7 மாணவர்கள் ஒரு ஆசிரியருக்கு கொரோனா உறுதி... பெற்றோர்கள் அதிர்ச்சி...``

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது முதல் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கணிசமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என 60 ககும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு ஆசிரியர் மற்றும் 7 மாணவ மாணவியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் கணபதி பாளையம் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த பள்ளியில் படிக்கும் 578 மாணவ மாணவியருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் சேவூர் அரசு பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவன், உடுமலை அரசு உதவி பெறும் பள்ளியில்  10 ஆம் வகுப்பு மாணவி  , புங்கமுத்தூர் அரசு உதவி பெறும் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவன், மடத்துக்குளம் ஜே. ஆர்.சி பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவன்,  குன்னத்தூர் பெண்கள் பள்ளியில் 2 பேர் பெண்கள், வீர்பாண்டி பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவி ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரே நாளில் பள்ளி ஆசிரியர் உள்பட 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.