தமிழ்நாட்டில் இன்னும் 6 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் இன்னும் 6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டியுள்ளதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இன்னும்  6 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் மீண்டும் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சார்ந்த கூட்டங்களில், அதிகமானோர் கூடுவதால் தொற்று பாதிப்பு உயர்வதாகக் கூறினார்.

மேலும், தமிழகத்தில் 16 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு 1 புள்ளி 5 சதவீதத்திற்கு மேல் உள்ளதாகவும், மகாராஷ்டிரா மற்றும் கேரள மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், எல்லைப் பகுதிகளில்  கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில், இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர், தமிழகத்தில் இன்னும் 6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டியுள்ளதாக கூறினார்.