இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது... ஒரு படகு பறிமுதல்...

இந்திய எல்லையில் அத்துமீறி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 6 பேர் இந்திய கடலோர பாதுகாப்பு குழுமத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது... ஒரு படகு பறிமுதல்...

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்ட 6 இலங்கை மீனவர்களையும் ஒரு மீன்பிடி படகினையும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுக்காப்புடன் தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் பகுதிக்கு கொண்டு வந்து கடலோர பாதுகாப்பு குழுமத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இந்திய கடலோர காவல்படையினருக்கு சொந்தமான ஆதேஸ் என்ற கப்பல் மூலம் இந்திய கடலோர காவல் படையினர்  ரோந்து பணியில் நேற்று காலை ஈடுபட்டபோது  சர்வதேச கடல் எல்லையில் இருந்து இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்து கொண்டிருந்த சிலரை கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க | கொள்ளிடம் ஆற்றில் முதலையா? அச்சத்தில் பொது மக்கள்...

இலங்கையை சேர்ந்த வேருவல பகுதியை சார்ந்த முகமது ரசார் மற்றும் நுவான்,ருவான், மதுரங்க், அப்துர் ரகுமான், உள்ளிட்ட 6 பேரையும் மீன்பீடிக்க பயனப்டுத்திய மீன்பிடி படகு ஆகியவைகளை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல்படையினர் இன்று தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கடல்பகுதிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வந்து கடலோர காவல் குழுமத்தினரிடம் ஒப்படைத்தனர். 

தொடர்ந்து கைது செய்யப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்ட  6 இலங்கை மீனவர்களிடம் கடலோர காவல் குழுமத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | மதுரையில் நடைபெற்ற மீன்பிடி திருவிழா... பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு...