படுகொலை செய்யப்பட்ட காவல் அதிகாரி குடும்பத்திற்கு ரூ.5.50லட்சம் வழங்கிய காவலர்கள்..!

ஆடு திருடர்களால் படுகொலை செய்யப்பட்ட காவலரின் குடும்பத்திடம் வழங்கப்பட்டது..!

படுகொலை செய்யப்பட்ட காவல் அதிகாரி குடும்பத்திற்கு ரூ.5.50லட்சம் வழங்கிய காவலர்கள்..!

ஆடு திருடர்களை பிடிக்க சென்று படுகொலை செய்யப்பட்ட நாவல்பட்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டம் நாவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய பூமிநாதன், கடந்த 20 ஆம் தேதி பணியிலிருக்கும்போது ஆடு திருட்டு வழக்கில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு,  திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட காவல் துறையினர் சார்பாக, 5 லட்சத்து 50 ஆயிரத்து 600 ரூபாயை, பொன்னேரி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மகிதா ஆணி கிறிஸ்டி திருச்சியில் உள்ள பூமிநாதன்  இல்லத்திற்கு நேரில் சென்று வழங்கினார்.