கொரோனா 3வது அலை பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் வாரம் தோறும் நடத்தப்பட்டு லட்சக் கணக்காண மக்களுக்கு தடுப்புசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து இன்று 5.4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தன.
45 பாா்சல்களில் வந்த தடுப்பூசிகளை விமான நிலைய அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.