ரூ.7 கோடி வரை அபராதம்: சென்னை மாநகராட்சி அதிரடி!
சென்னை எழும்பூரில் கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத திருமண மண்டபத்திற்கு 30 ஆயிரம் அபராதம் விதித்து, சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை எழும்பூரில் கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத திருமண மண்டபத்திற்கு 30 ஆயிரம் அபராதம் விதித்து, சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா தடுப்பு வழிகாட்டு முறைகள் குறித்து, திருமண மண்டபங்களில் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொள்ளும் மண்டல அதிகாரிகள், தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்காதது, முகக்கவசம் அணியாதது உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத மண்டபங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை எழும்பூரில் உள்ள மண்டபத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் அபராம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஏழு திருமண மண்டபங்களுக்கு அபராதம் விதித்துள்ளதாகவும், விதிகளை பின்பற்றாத தனிநபர்கள், உணவகங்கள், மளிகை கடைகள், இறைச்சி கூடங்கள், நிறுவனங்களிடம் இருந்து இதுவரை 6 கோடியே 38 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.