விபத்து ஏற்படுத்தியவரை விடுவிக்க லஞ்சம்... ஆய்வாளர் உள்பட 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்...

பொள்ளாச்சியில் விபத்து ஏற்படுத்தியவரை விடுவிக்க  லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

விபத்து ஏற்படுத்தியவரை விடுவிக்க லஞ்சம்... ஆய்வாளர் உள்பட 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்...
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, விபத்து ஏற்படுத்தியவரை வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர்   மற்றும்  காவலர் இருவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
 
பொள்ளாச்சியில் நூல்மில் நடத்துபவரின் சொகுசு காரினை ஓட்டிய சுரேஷ் என்பவர், மொபட் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். இதில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, போலீசார் சுரேஷ் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
 
இந்த நிலையில் அவரை ஜாமீனில் விடுவிக்க இன்ஸ்பெக்டர் சுரேஷ், ஏட்டு வெங்கடாச்சலம் ஆகியோர் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.