15 ஆம் தேதி முதல் ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் வழங்கப்படும் : தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா நிவாரணத் தொகையின் 2வது தவணைக்கான டோக்கன் ஜூன்11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

15 ஆம் தேதி முதல்  ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் வழங்கப்படும் : தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா நிவாரண நிதியாக  அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 4 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் கடந்த மே மாதம் வழங்கப்பட்டது. 

இதனையடுத்து இரண்டாம் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும், 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தையும்,   முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3  ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  


இந்நிலையில் 2 ஆயிரம் ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்களின் தொகுப்பினை வழங்குவதற்கான டோக்கன்கள் ஜூன் 11 முதல் 14 ஆம் தேதி வரை நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து 15 ஆம் தேதியில் இருந்து  காலை 8 மணி முதல் 12 மணி வரை பணம் மற்றும் பொருட்களை நியாய விலைக்கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.