கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 2 போதை ஆசாமிகள் கைது

சென்னை கொடுங்கையூர் பகுதியில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 2 போதை ஆசாமிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 2 போதை ஆசாமிகள் கைது

கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் சந்திப்பு பகுதியில் இரண்டு நபர்கள் போதையில் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இருவரும் கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் மற்றும் கீர்த்தி என்பது தெரியவந்தது.  

இதனையடுத்து, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.