சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நான்காவது மெகா தடுப்பூசி முகாமில் 17 லட்சத்து 19 ஆயிரம் டோஸ் தடுப்பூசி வரை செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் இதுவரை சுமார் 5 கோடி, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி மழை காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வகையான தொற்று நோய்களுக்கும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்ட அவர், பொதுமக்களும் தடுப்பு பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.