சுதந்திர தின கண்காணிப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார் தீவிரம்!

சென்னையில் சுதந்திர தின கண்காணிப்பு பணியில் 15 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சுதந்திர தின கண்காணிப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார் தீவிரம்!

சென்னையில் சுதந்திர தின கண்காணிப்பு பணியில் 15 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய சுற்றுலாத் தலங்கள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அணு உலை அமைந்துள்ள இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 12 காவல் மாவட்ட எல்லைகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர் முழுவதும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, முக்கிய இடங்களில் ட்ரோன்  மூலம் கண்காணித்தும், நகரின் முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகனத்தணிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதல்வர் கொடி ஏற்றும் கோட்டையை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், கோட்டை முழுவதும், நவீன சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.