சென்னையில் புதிதாக 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ...

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 50 ஆயிரத்து 145 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் புதிதாக 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் நேற்று ஆயிரத்து 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 98 ஆயிரத்து 493 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 12 ஆயிரத்து 288 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 315 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர் களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 50 ஆயிரத்து 145 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனால் தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 60 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக இருந்த நிலையில் நேற்று 139 ஆக குறைந்துள்ளது.