ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் 134 கோடி ரூபாய்க்கு பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது: அமைச்சர் மூர்த்தி

கடந்த வாரத்தில் ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் 134 கோடி ரூபாய்க்கு பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் 134 கோடி ரூபாய்க்கு பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது: அமைச்சர் மூர்த்தி

சென்னை சாந்தோமில் உள்ள பதிவுத்துறை தலைமை அலுவலகத்தில் மாவட்ட பத்திரப்பதிவர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு முதன்மை செயலாளர் ஜோதி நிர்மலா, பத்திரப்பதிவு தலைவர் சிவன் அருள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, பத்திர பதிவு முறையாக  நடந்துள்ளதா எந்தந்த இடங்களில் தவறான பதிவுகள் நடந்திருக்கிறது என்பதை ஆய்வு செய்துள்ளோம் என்றார்,

தவறான பத்திரங்களை எழுதி பதிவு செய்யும் பத்திர ஆவண எழுத்தர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தார். இரண்டு மாத காலத்தில் படிப்படியாக பத்திரப் பதிவுத்துறை சீர் செய்யப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் தவறான போலி பத்திரப்பதிவுகள் மற்றும் ஆள் மாறாட்டம் நடைபெற்றுள்ளது என்றும் அது தொடர்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு சேவை மையத்திற்கு வந்த  புகார்களில் 1 மணி நேரத்திற்குள், அந்த புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதுவரை 5 ஆயிரம் புகர்களில் 2500 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

அரசு வழிகாட்டு மதிப்பீட்டின் (guide line value) அடிப்படையில் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. கடந்த வாரத்தில் ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் 134 கோடி ரூபாய்க்கு பத்திரபதிவு நடைபெற்றுள்ளது. வருங்காலத்தில் இந்த தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

ஜிஎஸ்டி நிலுவைத்தொகை குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மிக விரைவில் மத்திய அரசு நிலுவைத்தொகையை வழங்கும் என எதிர்பார்க்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியதை 10 % கூட நிறைவேற்றியிருக்க மாட்டார்கள்.திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளாக சொல்லாததையும் தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றையும் நிறைவேற்றி வருகிறார்.  அரசை 5 லட்சம் கோடி கடனில் விட்டுச்சென்ற அதிமுகவிற்கு போராட்டம் குறித்து பேச தகுதி இல்லை என அமைச்சர் மூர்த்தி விமர்ச்சித்தார்.