அரசியல் கட்சி தலைவர்கள் மீதான 130 அவதூறு வழக்குகள் ரத்து

அரசியல் கட்சி தலைவர்கள் மீதான அனைத்து அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அரசியல் கட்சி தலைவர்கள் மீதான 130 அவதூறு வழக்குகள் ரத்து

அரசியல் கட்சி தலைவர்கள் மீதான அனைத்து அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2012-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறு பேச்சுகளுக்காக, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், விஜயதாரணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் பிரமுகர்கள் பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத், அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன், தி.மு.க.வின் கே. என்.நேரு, எஸ்.எம்.நாசர், எம்.பி.க்களான கனிமொழி, தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி, எஸ்.ஆர்.பார்த்திபன், தி.மு.க. தலைமை கழக பேச்சாளர்கள் ஆகியோர் மீது 130 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்ததாக கூறியுள்ளார். தற்போது, அவைகள் அனைத்தும் திரும்ப பெறப்படுவதாகவும், அதன் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளும் கைவிடப்படுவதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.