2 டோஸ்களை செலுத்திக்கொண்ட 12 சதவீதம் பேருக்கு கொரோனா.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில், தடுப்பூசிகளின் இரு டோஸ்களை செலுத்திக்கொண்ட 12 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 டோஸ்களை செலுத்திக்கொண்ட 12 சதவீதம் பேருக்கு கொரோனா.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனாவை முழுவதுமாக கட்டுப்படுத்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், மரபணு மாறிய வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய, சுமார் ஆயிரத்து 159 மாதிரிகள், பெங்களூருவில் உள்ள ஸ்டெம் செல் மற்றும் ரீஜெனரேட்டிவ் மருத்துவ நிறுவனத்துக்கு மாநில அரசு அனுப்பி வைத்திருந்தது.

அதில் 559 மாதிரிகளின் முடிவுகள் வெளியான நிலையில், அவர்களில் 66 பேருக்கு தொற்று பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த 66 பேரும்  தடுப்பூசிகளுக்கான இரு டோஸ்களை செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமல்லாது,  அவர்களில் 55 பேருக்கு மரபணு மாறிய டெல்டா ரக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.