கூட்டுறவு சங்கங்களில் 100% நகைகள் ஆய்வு... நாள்தோறும் அறிக்கை அளிக்க தமிழக அரசு உத்தரவு...

கூட்டுறவு சங்கங்களில் 100 சதவீத நகைகளை ஆய்வு செய்து நாள்தோறும் அறிக்கை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் 100% நகைகள் ஆய்வு... நாள்தோறும் அறிக்கை அளிக்க தமிழக அரசு உத்தரவு...

கூட்டுறவு சங்கங்களில் 100 சதவீத நகைகளை ஆய்வு செய்து நாள்தோறும் அறிக்கை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால் நகைக்கடன் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ள எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து 5 சவரனுக்கு உட்பட்டு மட்டுமில்லாமல் கூட்டுறவு வங்கிகளால் வழங்கப்பட்ட அனைத்து பொது நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
 
நகைக்கடன்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டுறவு சங்கங்களில் 100 சதவீத நகைகளை ஆய்வு செய்து நாள்தோறும் அறிக்கை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாள்தோறும் 250 கிராம் முதல் 300 கிராம் வரை நகைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும்,100 சதவீத நகைகளையும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.