கண்ணீர் விட்ட மல்யுத்த வீராங்கனை - காரணம் என்ன?

கண்ணீர் விட்ட மல்யுத்த வீராங்கனை - காரணம் என்ன?

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பாஜக சார்பில் எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார்.இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளை செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்று  டெல்லி காவல் துறை அறிவிப்பு

மேலும் படிக்க | ரஜினி ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி..! 'ஜெயிலர்' ரிலீஸ் தேதியை அறிவித்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

அதோடு இவரால் தேசிய பயிற்சி முகாம்களில் நியமிக்கப்பட்ட சில பயிற்சியாளர்கள் பல ஆண்டுகளாக பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றனர் என்றும் குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலி போன்றவர்கள் கலந்து கொண்டனர். போராட்டம் தொடர்பாக பேசிய பஜ்ரங் புனியா " இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் அனைவரும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பால் எங்களை சிறப்பாக நடத்தும் வரை தேசிய அல்லது சர்வதேச போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள்" என்று அறிவித்தார். பல்வேறு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

மேலும் படிக்க | வளைவில் வேகமாக திரும்பிய பேருந்து.. சாலையில் தூக்கியெறியப்பட்ட இளம்பெண்

அதன் தொடர்ச்சியாக ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த போராட்டம் தோல்வியில் முடிந்த நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மல்யுத்த வீராங்கனைகள் சம்மதம் தெரிவித்தனர்.

.

இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையிலும் FIR பதிவு செய்யப்படாத நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கூறி மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்றிரவு மழை பெய்த காரணத்தால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர் வீராங்கனைகள் தங்கள் படுக்கை நனைந்ததால் வேறு படுக்கை கொண்டு வர முயன்றுள்ளனர். ஆனால் அதற்கு டெல்லி போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரி, இரண்டு மல்யுத்த வீரர்களைத் தாக்கியதாகவும், சக போலீஸ் அதிகாரிகள் அதைக் கண்டும் அமைதியாக நின்றனர் என்றும் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் படிக்க | ரஜினி ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி..! 'ஜெயிலர்' ரிலீஸ் தேதியை அறிவித்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்

இது தொடர்பாக கண்ணீர் மல்க பேசிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் "அவர்கள் எங்களிடம் இப்படி நடந்துகொள்வதற்கு நாங்கள் என்ன குற்றவாளிகளா. போலீஸ்காரர்களால் நான் துன்புறுத்தப்பட்டுத் தள்ளப்பட்டேன். பெண் போலீஸார்கள் எல்லாம் எங்கே போனார்கள். நாங்கள் இப்படிப்பட்ட நாள்களைப் பார்க்கவா பதக்கங்களை வென்றோம் " என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா "என்னுடைய பதக்கங்கள் அனைத்தையும் திரும்பப்பெறுமாறு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.