உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம்...

இங்கிலாந்தில் பெய்து வரும் மழை காரணமாக, இந்தியா-நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம்...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமயிலான நியூசிலாந்து அணியும் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன. முதல் முறையாக ஐ.சி.சி. நடத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதால், அதனை காண கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். 

போட்டி நடைபெறும் இங்கிலாந்தின் சவுதாம்டனில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காலை முதலே லேசான தூறல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால், போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே  முதல் நாள் ஆட்டத்தின் முதல் பகுதியில் ஆட்டம் இருக்காது என, பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.  சவுதாம்டனில் அடுத்த 5 நாள்களுக்கு மழை இருக்கும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.