உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து...

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமயிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. முதல் முறையாக ஐ.சி.சி. நடத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதால், அதனை காண கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்போடு இருந்தனர்.

ஆனால், போட்டி நடைபெறும் இங்கிலாந்தின் சவுதாம்ப்டனில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால்  போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நாளை காலை 10. 30 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. சவுதாம்ப்டனில் அடுத்த 5 நாள்களுக்கு மழை இருக்கும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் பெரும்  ஏமாற்றம் அடைந்துள்ளனர்.