
பாகிஸ்தானில் மூன்று ஒருநாள், 5 டி20 ஆட்டங்களை விளையாடத் திட்டமிட்டு நியூசிலாந்து அணி கடந்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. எனினும் போட்டி தொடங்கும் தினத்தன்று பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இதையடுத்து பாகிஸ்தானில் இரு டி20 போட்டிகளில் விளையாடவிருந்த இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. டி- 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை மோதுகின்றன. இதை முன்னிட்டு பேசிய பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறுகையில்,
நியூசிலாந்து மீது தான் எங்களுக்கு கோபம், அவர்களை தோற்கடிக்க தான் விரும்புகின்றோம், இந்தியாவுடன் எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் இந்தியாவுக்குத்தான் அதிக அழுத்தம் இருக்கும். மைதானம் முழுக்க இந்திய ரசிகர்கள் இருப்பார்கள்.