நியூசிலாந்து மீது தான் எங்களுக்கு கோபம்...சோயிப் அக்தர்

எங்களுக்கு கோபம் இந்தியா மீது அல்ல, பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடரை ரத்து செய்த நியூசிலாந்து மீது தான் என முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

நியூசிலாந்து மீது தான் எங்களுக்கு கோபம்...சோயிப் அக்தர்

பாகிஸ்தானில் மூன்று ஒருநாள், 5 டி20 ஆட்டங்களை விளையாடத் திட்டமிட்டு நியூசிலாந்து அணி கடந்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. எனினும் போட்டி தொடங்கும் தினத்தன்று பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இதையடுத்து பாகிஸ்தானில் இரு டி20 போட்டிகளில் விளையாடவிருந்த இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. டி- 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை மோதுகின்றன. இதை முன்னிட்டு  பேசிய பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறுகையில்,

நியூசிலாந்து மீது தான் எங்களுக்கு கோபம், அவர்களை தோற்கடிக்க தான் விரும்புகின்றோம், இந்தியாவுடன் எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் இந்தியாவுக்குத்தான் அதிக அழுத்தம் இருக்கும். மைதானம் முழுக்க இந்திய ரசிகர்கள் இருப்பார்கள்.

உங்களுடைய தொலைக்காட்சி ஊழியர்கள் இருப்பார்கள். அதனால் இதில் தோற்றால் எங்களுக்குப் பிரச்சினை இல்லை. பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் எடுத்துவிட்டால் மிகப்பெரிய வீரர்களுக்கும் தடுமாற்றம் ஏற்படும்.
ஆட்டத்தில் பாகிஸ்தானை விடவும் இந்தியா நிலைமையை நன்கு கையாண்டால் நல்லது. ஒருவேளை பாகிஸ்தான் ஆச்சரியப்படுத்தினால் என்ன நடக்கும் எனக் கூறியுள்ளார்.