இதேபோல் போன முறையும் நடந்திருக்கு.. இந்த முறை? ரசிகர்களுக்கு ருதுராஜ் கெய்க்வாட் உருக்கமான கோரிக்கை!!

சிஎஸ்கே அணியின் முக்கிய வீரான ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து சொதப்பி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

இதேபோல் போன முறையும் நடந்திருக்கு.. இந்த முறை? ரசிகர்களுக்கு ருதுராஜ் கெய்க்வாட்  உருக்கமான கோரிக்கை!!

ஐபிஎல் 15 வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. அதாவது ஹாட்ரிக் தோல்வி என்று சொல்லலாம்.

மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில் இன்னும் 11 போட்டிகளே உள்ள நிலையில் சிஎஸ்கே அதிகபட்சம் 9 போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடிவும்..

இந்நிலையில், சிஎஸ்கே-வின் நச்சத்திர வீரரான ருத்துராஜ் கெய்க்வாட், இந்த சீசனில் 0,1,1 என் மூன்று போட்டிகளிலும் சொதப்பி வருவதால், அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால், தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்போம் என கேப்டன் ஜடேஜா தெரிவித்துள்ளார்.  ருத்துராஜ் எங்கள் அணியின் முக்கியமான வீரர். அவர் அடுத்த போட்டியிலும் விளையாடுவார். ருத்துராஜ் மீண்டும் ஃபார்ம்க்கு வருவார் என நாங்கள் நம்புகிறோம். கடந்த காலங்களில் சிஎஸ்கே-வுக்கு பல வெற்றிகளை தேடி தந்துள்ளார். இதனால், தொடர்ந்து அவருக்கு ஊக்கம் அளிப்போம் என்றார்..

இந்நிலையில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு ருதுராஜ் கெய்க்வாட் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை அளித்துள்ளார். அதில், சிஎஸ்கே ரசிகர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும். எங்களை நம்புங்கள். கடந்த முறை நாங்கள் சாம்பியன் அணியாக இருந்தோம்.

எதிர்வரும் போட்டிகளில் வெற்றி பெற 100 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்குவோம் என கூறியுள்ளார். கடந்த 2 சீசன்களில் முதல் 3 ஆட்டங்களில் சொற்ப வித்தியாசத்தில் ஆட்டமிழந்த அவர், 4வது போட்டியில் அரைசதம் அடித்துள்ளார். இதனால் இந்த முறையும் ரூத் ராஜ் அரைசதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.