டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் இன்று துவக்கம்

இன்று தொடங்கும் டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் தமிழக வீரர் மாரியப்பன் தேசிய கொடியை ஏந்தி செல்ல உள்ளார். 

டோக்கியோ பாராலிம்பிக்  போட்டிகள் இன்று துவக்கம்

இன்று தொடங்கும் டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் தமிழக வீரர் மாரியப்பன் தேசிய கொடியை ஏந்தி செல்ல உள்ளார். 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்தன. அதைத் தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி  இன்று தொடக்கி செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 163 நாடுகளில் இருந்து 4,537 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். 

வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், சைக்ளிங், குதிரையேற்றம், 5 பேர் கால்பந்து, துப்பாக்கி சுடுதல், சிட்டிங் கைப்பந்து, நீச்சல், டேபிள் டென்னிஸ், வீல்சேர் கூடைப்பந்து உள்ளிட்ட 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடைபெற உள்ளது. பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது.  இன்று நடைபெறும் தொடங்க விழாவில் கடந்த முறை உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தேசிய கொடியை ஏந்தி செல்ல உள்ளார்.